Skip to main content <%-- Protanopia filter --%> <%-- Deuteranopia filter --%> <%-- Tritanopia filter --%>

நம்ம சென்னை செயலி – சென்னை நகர்வாழ் மக்களின் குறைகளுக்குத் தீர்வு காணும் செயலி

 

சென்னை போன்ற பெருநகரங்களில் நகர்வாழ் மக்களின் அன்றாடப் பயன்பாடுகள் சார்ந்த குறைபாடுகளைக் கேட்டு, கண்டறிந்து உடனடித் தீர்வு காண்பது மாநகராட்சி அதிகாரிகளின் தலையாய கடமையாகும்.

இதற்குப் பெரிதும் உதவும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி அமைப்பினால் சீர்மிகு சென்னை அமைப்பின் கீழ் வடிவமைக்கப்பட்டதுதான் நம்ம சென்னை செயலி.

சாலை, குடிநீர், கழிவுநீர், மின்சாரம் போன்ற, மக்களின் அன்றாடப் பயன்பாடுகள் சார்ந்த குறைபாடுகளை குறுந்தகவல்கள் மூலமாகவோ புகைப்படம் எடுத்தோ இச்செயலியில் பதிவு செய்தால் அக்குறைப்பாடுகளுக்கு உடனடித் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளால் எடுக்கப்படும்.

நம்ம சென்னை செயலி வீடியோ

நம்ம சென்னை செயலி – உங்கள் கைப்பேசியில் உங்கள் ஆதாரம்

தொழில்நுட்ப முறைகளை மக்களுக்கு பயன் தரும் வகையில் சிறந்த முறையில் செயல்படுத்துவதே சீர்மிகு சென்னை மாநகரப் பிரிவு அமைப்பின் உயரிய நோக்கமாகும்.

இந்தச் செயலியின் மூலம் நகரப் பயன்பாடுகள், அடிப்படைத் தேவைகள் சார்ந்த குறைகளைப் பதிவு செய்யலாம். இது உடனடியாக பெருநகராட்சி அதிகாரிகளின் கவனத்திற்கு உட்படுகிறது

இந்தச் செயலியின் மூலம் நகரப் பயன்பாடுகள், அடிப்படைத் தேவைகள் சார்ந்த குறைகளைப் பதிவு செய்யலாம். இது உடனடியாக பெருநகராட்சி அதிகாரிகளின் கவனத்திற்கு உட்படுகிறது

இந்தச் செயலியின் மூலம் நகரப் பயன்பாடுகள், அடிப்படைத் தேவைகள் சார்ந்த குறைகளைப் பதிவு செய்யலாம். இது உடனடியாக பெருநகராட்சி அதிகாரிகளின் கவனத்திற்கு உட்படுகிறது.

நகர்வாழ் மக்களின் அன்றாடப் பயன்பாடுகள் சார்ந்த குறைபாடுகளுக்கு உடனடித் தீர்வு காண உதவுவது மட்டுமல்லாமல் இடர்கால மேலாண்மை, சொத்துவரி, பொது சுகாதாரம், தேர்தல் காலத் தகவல்கள் போன்றவை உள்ளடங்கிய பல விவரங்களை மக்கள் பெறும் வகையில் இச்செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது

மக்களின் குறைகள், புகார்கள் மற்றும் கருத்துகளைக் கேட்டறிதல்

நகர்வாழ் மக்கள் தம் அன்றாடப் பயன்பாடுகள் சார்ந்த செயல்பாடுகள் குறித்த கருத்துகளையும், ஏதேனும் குறைகள் இருப்பின் அவை குறித்த புகார்களையும் இந்தச் செயலியின் மூலம் பதிவு செய்யலாம். இச்செயலி, எளிதாகப் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மக்களில் பெரும்பாலானவர்கள் கைப்பேசி பயன்படுத்துவதால் மக்கள் தகவல்கள் பதிவு செய்வதும் அவை அதிகாரிகளின் கவனத்திற்கு உடனடியாகச் சென்றடைவதும் சாத்தியமாகிறது.

 

சாலைகளில் குழிகள், மழைநீர் தேக்கம், அகற்றப்படாத குப்பை கூளங்கள் போன்றவை தென்பட்டால் அவற்றை உடனே படம் எடுத்து, புகார்களைப் பதிவு செய்து பதிவேற்றம் செய்யலாம்.

சாலைகளில் குழிகள், மழைநீர் தேக்கம், அகற்றப்படாத குப்பை கூளங்கள் போன்றவை தென்பட்டால் அவற்றை உடனே படம் எடுத்து, புகார்களைப் பதிவு செய்து பதிவேற்றம் செய்யலாம்.

பதிவு செய்யப்பட்ட புகார்களின் செயல்நிலை பற்றி விவரங்கள் அறியலாம்.

பதிவு செய்யப்பட்ட புகார்களின் செயல்நிலை பற்றி விவரங்கள் அறியலாம்.



அவசர நிலைகளில் பெருநகர சென்னை மாநகராட்சி பணிக்குழுவிலிருந்து மக்களுக்கு நேரடியாக அறிவிப்புகள், மற்றும் தேவையான தகவல்கள் அனுப்பப்படும்.

அவசர நிலைகளில் பெருநகர சென்னை மாநகராட்சி பணிக்குழுவிலிருந்து மக்களுக்கு நேரடியாக அறிவிப்புகள், மற்றும் தேவையான தகவல்கள் அனுப்பப்படும்.



நிகழ்வு ஆய்வு

Making Ahmedabad transport smarter

 

 

Ahmedabad is the seventh largest city in India, with a vision to become a smart city. The city adopted NEC's intelligent transport management system to improve the quality of ..

World Class Transport and Sustainable Development

 

 

TDP has promoted bus rapid transit (BRT) in China for nearly a decade, and now works in Guangzhou, Harbin, and Lanzhou. After five years of working on developing BRT...